ஹாங்காங் பிரச்சினை பற்றிய அரையாண்டு அறிக்கையை பிரிட்டன் வெளியிட்டது குறித்து, ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்திலுள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்புப் பிரதிநிதி அலுவலகம் 24ஆம் பதில் அளித்தபோது, ஹாங்காங் அலுவல் சீனாவின் உள் விவகாரத்தைச் சேர்ந்தது. இதனால், பிரிட்டன் தரப்பு கவனத்துடன் செயல்பட்டு, ஹாங்காங் விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தது.
இச்சிறப்புப் பிரதிநிதி அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய பின், அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை சட்டத்தின்படி, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள், ஹாங்காங் மக்களே ஹாங்காங்கை ஆள்வது, உயர்ந்த தன்னாட்சி ஆகிய கொள்கைகளை நடுவண் அரசு பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதோடு, ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிதானத்தையும் நிலைநிறுத்தி வருகின்றது என்று கூறினார். மேலும், ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கையை நடுவண் அரசு செயல்படுத்துவதன் மன உறுதி மாறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.