முன்பு ஒரு காலத்தில், வெள்ளை நிறப் பாம்பு ஒன்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்து அழகான மங்கையாக மாறியது. பை சு சென் என அவருக்குப் பெயர் சூட்டப்பட்டது. பச்சை நிறப் பாம்பிலிருந்து மாறிய சியௌ ஜிங் அவளின் தங்கையாவார்.
ஒரு நாள், பை சு சென் தங்கையுடன் மனித உலகத்துக்கு விளையாடச் சென்றார். சிஹூ ஏரியைப் பார்வையிட்ட போது பெரும் மழை திடீரென பெய்து வந்தது. குடை இல்லாத பை சு செங் அவர்கள் மழையில் நனைந்து துன்பப்பட்டனர். ஆனால், அவர்களது தலை மீது குடை ஒன்று தோன்றியது. அழகும் ஈர்ப்பாற்றலும் மிக்க அறிஞர் ஒருவர் குடையைத் தாங்கி அவர்களை மழையிலிருந்து காப்பாற்றினார். இந்த அறிஞர் சியு சியேன். முதல் பார்வையிலேயே பை சு சென் மற்றும் சியு சியேனுக்குமிடை காதல் தோன்றியது.
காதலில் மூழ்கிய அவர்களுக்குத் திருமணம் செய்தனர். இத்தம்பதி, மருந்து கடை ஒன்றை நிறுவி நோயால் துன்பப்பட்டவர்களுக்கு உதவியளித்தனர். சுய நலமில்லாத அவர்கள் ஏழை மக்க்ளுக்கும் இலவசமாகச் சிகிச்சை அளித்தனர்.