ஆனால், துறவி ஒருவர் பாம்பாகிய பை சு சென் கண்டறிந்தார். இத்தம்பதியைப் பிரிக்க அவர் சியு சியேனை சந்தித்துப் பேசினார். உன் மனைவி ஒரு பாம்பு என்றும் அவள் உன்னைக் கொன்று சாப்பிடுவாள் என்றும் துறவி கூறினார். துறவியின் அச்சுறுத்தலை சியு சியேன் நம்பவில்லை. என் மனைவி தங்க மனமுடையவர். பாம்பாக இருந்தாலும், நான் அவளிடமிருந்து பிரிய மாட்டேன் என்று அவர் உறுதி மொழி கூறினார்.
கோபமடைந்த அந்த துறவி, சியு சியேனை தடை காவலில் வைத்தார். கணவரைக் காப்பாற்ற, பை சு சென், துறவியுடன் போரிட்டு தோல்வியடைந்ததால் சிஹூ ஏரிக்கு அருகிலுள்ள கோபுரத்தில் தடைக் காவலில் வைக்கப்பட்டார்.
நீண்டகால தவம் செய்த பின், தங்கை சியௌ ஜிங் துறவியைத் தோற்கடித்து பை சு செங் காப்பாற்றினார். அதற்குப் பின்பு, இத்தம்பதி ஒன்றுகூடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது கதையும் சீனா முழுவதிலும் பரப்பரப்பாகியுள்ளது.