சிஹூ ஏரியும் இக்கதையால் ஒரு புகழ் பெற்ற காட்சித்தலமாக மாறியுள்ளது. கதையில் பை சு செங் தடை காவலில் வைக்கப்பட்ட அந்தக் கோபுரம், லே ஃபுங் தா என்பதாகும்.
உண்மையில், இக்கோபுரம் சுங் வம்சகாலத்தில் கட்டியமைக்கப்பட்ட ஒரு பௌத்த மதக் கோபுரமாகும். கோபுரத்தின் கீழே ஒரு நிலத்தடி அரண்மனை உள்ளது. புத்தர் சிலைகள், அரிய திருமறை நூல்கள் முதலிய தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தற்போது செஜியாங் மாநில அருங்காட்சியகத்தில் பேணிக்காக்கப்பட்டுள்ளன.
1924ஆம் ஆண்டு இக்கோபுரம் விழுந்து நொறுங்கியது. அதை மாதிரியாகக் கொண்டு ஒரு புதிய கோபுரம் கட்டியமைக்கப்பட்டது. இக்கோபுரத்தின் உயரம் சுமார் 70 மீட்டராகும். அதில் ஏறினால் சிஹூ ஏரியின் அழகை முற்றிலும் கண்டுரசிக்கலாம்.