• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நாளைக்கு காலையில் துவங்கும் சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத் தொடர்
  2017-03-04 12:11:54  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத் தொடர் மார்ச் 5ஆம் நாள் முதல் 15ஆம் நாள் வரை நடைபெறும். இக்கூட்டத் தொடர் நிறைவு பெற்ற பிறகு சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத் தொடரின் செய்தித் தொடர்பாளர் ஃபூ யிங் அம்மையார் 4ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அதை அறிவித்தார். நடப்புக் கூட்டத் தொடர்களைப் பேட்டி காண 3,000க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1,500க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இவ்வாண்டு, செய்தியர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க, கூட்டத் தொடரின்போது பெய்ஜிங்கிலுள்ள மீடியா எனும் செய்தி மையத்தில் 17 செய்தியாளர் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஃபூ யீங் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040