ஆயிரம் ஆண்டு வரலாறுடைய பௌத்த மதக் கோயில் லிங் யின் சி பற்றி கூறுகிறேன். இக்கோயில் சக்தி மிக்கது. அங்கே என்ன வேண்டினாலும், கண்டிப்பாக நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. சந்திர நாட்காட்டியின் முதல் நாள் இறை நம்பிக்கையாளர்கள் இக்கோயிலுக்குச் சென்று வணங்கிடுவர்.
லிங் யின் சி, ஹாங்சோவில் மிகவும் முன்னதாக கட்டியமைக்கப்பட்ட கோயிலாகும். அதன் பின்புறத்திலும் முன்புறத்திலும் இரண்டு மலைகள் கம்பீரமாக நிற்கின்றன. முன்புறத்தில் உள்ள மலை ஃபை லை பூங். சுமார் 326ஆம் ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த ஹூவே லி துறவி ஹாங்சோ நகரில் பயணம் மேற்கொண்டார். ஃபை லை பூங் மலையில் ஏறிய போது, அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். இம்மலையில் கடவுள்கள் வாழ்ந்துள்ளனர் என்று அவர் நம்பினார். அதனாலே, ஃபை லை பூங் மலைக்கு எதிரே கோயில் ஒன்றை நிறுவினார். இக்கோயில் தான் லிங் யின் சி. இக்கோயிலுக்கு ஆயிரத்து 700 ஆண்டுகள் வரலாறு உண்டு.