தில்லியில் பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் அவர் மேலும் கூறியதாவது
இந்த வெற்றியை புதிய இந்தியாவுக்கான அடிப்படையாகவே பார்க்கிறேன். இளைஞர்களின் கனவான புதிய இந்தியாவை நான் காண்கிறேன். தற்போது, 65 சதவீத வாக்காளர்கள் 35 வயதுக்குக் குறைவானவர்கள். புதிய இந்தியாவில் மகளிரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம். புதிய இந்தியாவில் ஏழை மக்கள் கேட்பது வாய்ப்பு தானே தவிர, கருணை உதவியல்ல. இந்த மாற்றம் நிகழ்ந்து வருவதை கண்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், கட்சி சார்பற்று, அனைத்து மக்களுக்கும் பாஜக பணியாற்றும். தேர்தலை மையமாக வைத்து நான் செயல்படுவதில்லை. எங்கள் முன் இலக்கு உள்ளது. 2022 ஆம் ஆண்டாது, இந்தியா சுதந்திரம் பெற்ற 75 ஆவது ஆண்டு. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை முன்னேற்றுவது என 125 கோடி மக்கள் உறுதி பூண்டால், நாட்டின் முன்னேற்றம் உறுதி. தற்போதைய இந்தியாவின் நிலைப்பாடு வளர்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார். (பண்டரிநாதன்)