வேளாண்துறை விநியோக முறைச் சீர்திருத்தத்தின் மூலம், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை சீன அரசு முன்வைத்துள்ளது. இது நல்ல நடவடிக்கையாகும். இதன் மூலம் அறிவியல் தொழில் நுட்பம் வேளாண் உற்பத்தியில் முக்கிய பங்கு ஆற்றும். இந்த நடவடிக்கைகள், வங்காளத்தேசத்தைப் பொறுத்த வரை, மிக முக்கியமான முன்மாதிரியாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
விதைகளின் இறக்குமதி முதல், வேளாண்துறையிலான திறமைசாலிகளின் பயிற்சி வரை, வேளாண்துறையில்,வங்காளத்தேசத்துக்கும் சீனாவுக்கும் ஆழமான ஒத்துழைப்பு உள்ளது. எதிர்காலத்தில் இத்துறையில் இரு தரப்புக்கும் மேலும் பரந்த ஒத்துழைப்பு வாய்ப்பு உண்டு என்றும் அவர் கூறினார்.(ஜெயா)