• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வேளாண்துறைச் சீர்திருத்தம் குறித்து வங்காளத்தேசத்தின் செய்தி ஊடகத்தின் பணியாளரின் கருத்து
  2017-03-13 15:25:25  cri எழுத்தின் அளவு:  A A A   
வங்காளத்தேசத்தின் செய்தி ஊடகத்தின் பணியாளர் ஷைக் சிராஜ் பேசுகையில், சீன அரசு, விவசாயிகளின் வாழ்க்கை தர மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாண்டு இரு கூட்டத்தொடர்களில், சீனாவின் வேளாண்துறைச் சீர்திருத்த்தில் பல உள்ளடக்கங்கள் படிக்கப்படத்தக்கது என்று அவர் கூறினார்.

வேளாண்துறை விநியோக முறைச் சீர்திருத்தத்தின் மூலம், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை சீன அரசு முன்வைத்துள்ளது. இது நல்ல நடவடிக்கையாகும். இதன் மூலம் அறிவியல் தொழில் நுட்பம் வேளாண் உற்பத்தியில் முக்கிய பங்கு ஆற்றும். இந்த நடவடிக்கைகள், வங்காளத்தேசத்தைப் பொறுத்த வரை, மிக முக்கியமான முன்மாதிரியாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

விதைகளின் இறக்குமதி முதல், வேளாண்துறையிலான திறமைசாலிகளின் பயிற்சி வரை, வேளாண்துறையில்,வங்காளத்தேசத்துக்கும் சீனாவுக்கும் ஆழமான ஒத்துழைப்பு உள்ளது. எதிர்காலத்தில் இத்துறையில் இரு தரப்புக்கும் மேலும் பரந்த ஒத்துழைப்பு வாய்ப்பு உண்டு என்றும் அவர் கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040