சீனாவின் மிக புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் இந்தியாவில் பெரிய அளவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். மேலும் நெருங்கிய சீன-இந்திய உறவையும் சீன-இந்திய பரிமாற்றத்துக்கு இரு நாடுகள் மேலும் முக்கியத்துவம் அளிப்பதையும் இந்த பயணமானது காட்டியுள்ளது என்று கொல்கத்தாவுக்கான சீன துணை நிலைத் தூதர் மா ச்சான்வூ தெரிவித்தார். இந்த இசை அரங்கேற்றம், சீன-இந்திய பரஸ்பர புரிந்துணர்வையும் நட்பையும் மேலும் அதிகரிக்கும். சீனாவுக்கும் இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கும் இடையிலான பரிமாற்ற ஒத்துழைப்பை இதுவும் மேலும் மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.