அமெரிக்க வட்டி விகிதத்திற்கான இலக்கு நிலையை 25 அடிப்படை புள்ளிகளுடன், 0.75 விழுக்காடு முதல் 1 விழுக்காடு வரை உயர்த்துவதாக ஃபெடரல் ரிசர்வ் வங்கி 15ஆம் நாள் அறிவித்துள்ளது. உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, வட்டி விகிதத்தை உயர்த்துவது இது 3ஆவது முறை. சந்தை நிலை மீதான எதிர்பார்ப்புக்கு இது பொருத்தமாக உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் இறுதிக்குள் அமெரிக்காவின் வட்டி விதிதத்தின் சராசரி நிலை 1.4 விழுக்காடாக இருக்கும் என்று ஃபெடரல் ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்தது. இவ்வாண்டுக்குள் அமெரிக்க வட்டி விகிதம் 2 முறை உயர்த்தப்படக் கூடும் என்பதை இது காட்டுகிறது. (வான்மதி)