சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள சௌதி அரேபிய மன்னர், சல்மான் பின் அப்துலஸிஸ் அல் சௌத்தை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்து பேசுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையேயான பன்முகமான நெடுநோக்குக் கூட்டாளியுறவை முன்னெடுத்து புதிய சாதனைகளை பெற இரு தரப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஷிச்சின்பிங் சந்திப்பின்பிபோது பேசுகையில், சௌதி அரேபியாவின் 2030 விருப்பக் காட்சி எனும் திட்டத்தை சீனா ஆதரிப்பதாகவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை அமைக்கும் உலகாவிய ஒத்துழைப்புக் கூட்டாளியாக சௌதி அரேபியா இருப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மக்கள் தொடர்பு, கல்வி, சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுலா, செய்தி, பாதுகாப்பு முதலான துறைகளில் ஒத்துழைப்புக்களை இரு தரப்பும் வலுப்படுத்த வேண்டும். மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட நெடுகிலுள்ள நாடுகளுடன் இணைந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை கூட்டாக உருவாக்க சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.