பிரான்சிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம் 16ஆம் நாள் கடித வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானது. அதில் பணியாளர் ஒருவர் காயமடைந்தார். அதேநாள் நண்பகல், பிரான்சின் தென்கிழக்கிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாகிச்சூடு நிகழ்ந்தது. அதில் 4 பேர் காயமுற்றனர். இந்நிலையில், தேசிய அளவில் அவசர நிலைமையை மேற்கொள்வது உரிய நடவடிக்கை. இந்நிலைமை ஜுலை 15ஆம் நாள் வரை நீடிக்கும் என்று பிரான்சு அரசுத் தலைவர் ஃபிரான்ஷுவர் ஹொலந்தே அன்று தெரிவித்தார்.
மேலும், அவசர சம்பவத்தைச் சமாளிக்க பிரான்சு அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். (வான்மதி)