• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது – தேர்தல் ஆணையம் விளக்கம்
  2017-03-17 11:05:21  cri எழுத்தின் அளவு:  A A A   
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சில அரசியல் கட்சியினரின் குற்றச்சாட்டை இந்தியத் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நிராகரித்துள்ளது.

மேலும், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியில் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பின்படி, வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது. வாக்குப் பதிவின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றச்சாட்டுக்களுடன் உரிய ஆதாரங்களை முன் வைத்தால், முழுகவனத்துடன் விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040