சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் 16ஆம் நாள் சௌதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலஸிஸ் அல் சௌத்துயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்புறவின் வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளின் யதார்த்த ஒத்துழைப்பை முன்னேற்ற இரு தரப்பும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன. பொருளாதார வர்த்தகம், எரியாற்றல், உற்பத்தி திறன், பண்பாடு முதலிய 14 இரு தரப்பு ஒத்துழைப்பு ஆவணங்களில் இரு நாடுகளும் கையொப்பமிட்டுள்ளன. உடன்படிக்கை ஒன்றில் 35 முக்கிய திட்டப்பணிகள் அடங்கும். இதில், 6500 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ளது.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கின் அழைப்பை ஏற்று, சௌதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலஸிஸ் அல் சௌத் 15ஆம் நாள் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள துவங்கினார். 11 ஆண்டுகளுக்கு பின், சௌதி அரேபிய மன்னர் சீனாவில் மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(மோகன்)