ஆப்கான் பிரச்சினை பற்றிய 2344ஆவது தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பவை மார்ச் 17ஆம் நாள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தானுக்கு உதவி அளிப்பது தொடர்பான பொதுக் கருத்துக்களை பன்னாடுகள் எட்டி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி மூலம் வட்டாரப் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இத்தீர்மானத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணிக்குப் பாதுகாப்பு உத்தரவாத சூழலைப் பல்வேறு தரப்புகளும் வழங்கி, ஒன்றுக்கொன்று தொடர்பையும், எதார்த்த ஒத்துழைப்பையும் முன்னேற்ற வேண்டும் என்றும் இத்தீர்மானத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி லியு ஜியே யீ செய்தி ஊடகங்களிடம் பேசுகையில், பாதுகாப்பவையில் இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, சர்வதேச சமூகத்தின் பொதுக் கருத்தை வெளிப்படுத்தி, சீனாவின் கருத்து மற்றும் திட்டம், உலக நிர்வகித்தலுக்கு முக்கிய பங்காற்றுவதைக் காட்டியுள்ளது என்று குறிப்பிட்டார். அதோடு, பரந்துபட்ட அளவிலான உறுப்பு நாடுகள் பாதுகாப்பவை தீர்மானத்தின் கோரிக்கையின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, இதை முன்னேற்ற வேண்டும் என சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.