சிரியா வெளியுறவு அமைச்சகம் 17ஆம் நாள் ஐ.நா தலைமைச் செயலாளர் மற்றும் பாதுகாப்பவைத் தலைவருக்கு அனுப்பிய மடலில், இஸ்ரேல் போர் விமானம் அன்று சிரியாவின் உரிமைப் பிரதேசத்தில் ஊடுருவி, வான் தாக்குதல் நடத்திய செயல்களை ஐ.நா கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.
சிரியாவில் தோல்வியடைந்து வரும் அதி தீவிரவாத சக்திகளை ஆதரிப்பது, இஸ்ரேல் அன்று வான் தாக்குதல் நடத்தியதன் நோக்கமாகும் என்று சிரியா வெளியுறவு அமைச்சகம் இம்மடலில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் செயல், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா சாசனத்தை அத்துமீறி, சிரியாவின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டையும், பிரதேச அமைதியையும் சீர்குலைத்துள்ளது என்று சிரியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நான்கு இஸ்ரேல் போர் விமானங்கள் அன்று விடியற்காலை சிரியாவின் மத்திய பகுதியில் உள்ள பழைய நகரான பால்மீராவுக்கு அருகில் உள்ள அரசு படைப்பிரிவின் வலுவிடம் மீது வான் தாக்குதல் நடத்தின என்று சிரியா ராணுவ வட்டாரம் அன்று வெளியிட்ட அறிக்கையில் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.