கடன் பிரச்சனை காரணமாக இந்தியாவின் ஹல்தியா துறைமுகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சீனாவின் சரக்குக் கப்பல் ஒன்று கடன் தீர்க்கப்பட்டதை அடுத்து துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜியாங்க்ஸு மாநிலத்தைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று கடந்த ஜூன் திங்கள் சீனாவின் நான் தொங்க் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு இந்தியாவினைச் சென்றடைந்தது. கடன் பிரச்சனையால் அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்தத இந்தச் சரக்குக் கப்பல் கடன் தீர்க்கப்பட்டதை அடுத்து 23 மாலுமிகளுடன் ஹல்தியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகு மார்ச் 19 ஆம் நாள் சீனாவின் டைசான் துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.