பன்னாட்டு பௌத்த மத மாநாத்தில் தலாய் லாமா அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு:சீனா
2017-03-20 18:24:46 cri எழுத்தின் அளவு: A A A
இந்திய அரசு நடத்தும் நடவடிக்கையில் கலந்து கொள்வதற்காக தலாய் லாமா அழைக்கப்பட்டதற்குக் கடும் மனநிறைவின்மையையும் உறுதியான எதிர்ப்பையும் சீனா தெரிவித்துள்ளது. திபெத் தொடர்பான பிரச்சினையில் இந்தியா தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் தெரிவித்தார். இந்திய ஊடகங்கள் வழங்கிய செய்தியின்படி, இந்திய பண்பாட்டு அமைச்சகமும் புதிய நாளந்தா பல்கலைக்கழகமும் பீஹார் மாநிலத்தில் பன்னாட்டு பௌத்த மத மாநாட்டை நடத்தின. அழைப்பின் பேரில் 14ஆவது தலாய் லாமா இந்திய அரசு அதிகாரியுடன் இம்மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். இது குறித்து பேசுகையில், திபெத்தை பிளவுப்படுத்தும் தலாய் லாமா குழுவின் சூழ்ச்சியை இந்தியா தெளிவாக அறிந்து கொண்டு, இரு நாட்டுறவைப் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்று ஹுவான் சுன்யிங் அம்மையார் கூறினார். (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய