கூட்டாளியுறவைக் கூட்டாக உருவாக்கி, அமைதி வளர்ச்சியைக் கூட்டாக நனவாக்குவது என்ற தலைப்பில், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மார்ச் 20ஆம் நாள், சீன வளர்ச்சி மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் முக்கிய உறையை ஆற்றினார்..
தான் நிறைவேற்ற வேண்டிய சர்வதேச பொறுப்புகளை சீனா ஆக்கமுடன் ஏற்று வருகிறது. ஆனால், உலகிற்கு தலைமை தாங்க சீனா எப்போதும் விரும்பவில்லை. உலகமயமாக்கக் காலத்தில், தனியாக செயல்படும் வீரருக்கு பதிலாக, கூட்டாக முயற்சி எடுக்கும் ஒத்துழைப்புக் கூட்டாளி உலகிற்கு வேண்டும். எதிர் நிலைக்குப் பதிலாக பேச்சுவார்த்தை மூலமும், கூட்டணிக்குப் பதிலாக கூட்டாளி மூலமும், பல்வேறு நாடுகளுடன் இணைந்து சமத்துவம், திறப்புத்தன்மை, ஒத்துழைப்பு ஆகிய உள்ளடங்கும் கூட்டாளியுறவை உருவாக்க சீனா விரும்புவதாக யாங்யீ தனது உரையில் தெரிவித்தார்.
தற்போது வரை, 97 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் வெவ்வேறு விதமான கூட்டாளி உறவுகளை சீனா நிறுவியுள்ளது. பெரிய நாடுகள், அண்டை நாடுகள், வளரும் நாடுகள் ஆகியவற்றுடனான கூட்டாளியுறவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இனி, தற்போதுள்ள அடிப்படையில், இந்த உறவின் உள்ளடக்கங்களை அதிகரித்து, உறவின் நிலையை உயர்த்தி, மேலும நெருங்கிய மற்றும் உலகளாவிய கூட்டாளியுறவுகளின் வலையமைப்பை உருவாக்க சீனா செயல்படும் என்று யாங்யீ குறிப்பிட்டார்.