• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் 2ஆவது ஆலையை அமைக்கும் சியௌமி
  2017-03-21 15:00:15  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சியௌமி, இந்தியாவில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது என்று திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் கூட்டுறவுடன் இந்த ஆலை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிட்டி நகரில் அமைய உள்ளது.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது இந்திய சியௌமியின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மனு ஜெய்ன் கூறுகையில், ஒரு விநாடிக்கு ஒரு அலைபேசி என்ற வீதம் ஒருங்கிணைந்த உற்பத்தித் திறனை நாங்கள் பெறுவோம் என்று தெரிவித்தார்.

முன்னதாக, 2014 ஜூலையில் இந்தியாவில் தனது முதலாவது உற்பத்தி ஆலையை சியௌமி அமைத்தது. இது 2015 ஆக்ஸடில் செயல்பாட்டுக்கு வந்தது. 2016 மார்ச் வரை, இந்தியாவில் விற்கப்பட்ட சியௌமி அலைபேசிகளில், 75 சதவீதம், முதலாவது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். அமைக்கப்படும் இரண்டாவது ஆலையுடன் இந்த எண்ணிக்கை 95-க்கும் அதிகமான சதவீதம் உயரும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அலைபேசி சந்தையில் சாம்சங்கை அடுத்து, சியௌமி, 10. 7 விழுக்காடு என்ற நிலையில் உள்ளதாக புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040