இலங்கையில் தற்போது நிலவி வரும் வறட்சியை சமாளிக்க ஒரு லட்சம் டாலர் நிவாரண நிதியை அளிக்குமாறு உலக நாடுகளுக்கு யுனிசெப் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளது. இதனால், 3 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுடன் 12 லட்சத்துக்கும் மேலானோர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மனித நேய உதவி தேவை என்று யுனிசெப் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உலக நீர் தினத்தில் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் உலக அளவில் 36 நாடுகள் மிகவும் கடுமையான நீர் அழுத்த்த்துக்குள்ளாகியுள்ளன. வெப்பநிலை உயர்வு, கடல் நீர் மட்டம் உயர்வு, வெள்ளப் பெருக்கு அதிகரிப்பு, வறட்சி, பனி உருகுதல் ஆகிய காரணங்களால் நீரின் தரத்தை பாதித்துள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.