சீனாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சியௌமி, இந்தியாவில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது என்று திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் கூட்டுறவுடன் இந்த ஆலை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிட்டி நகரில் அமைய உள்ளது.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது இந்திய சியௌமியின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மனு ஜெய்ன் கூறுகையில், ஒரு விநாடிக்கு ஒரு அலைபேசி என்ற வீதம் ஒருங்கிணைந்த உற்பத்தித் திறனை நாங்கள் பெறுவோம் என்று தெரிவித்தார்.