சீனாவின் சர்வதேச மின்சார நிறுவனம் முதலீடு செய்த ஹப் நிலக்கரி மின்னாற்றல் நிலையத் திட்டப்பணி, 21ஆம் நாள், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தின் ஹப் பிரதேசத்தில் கட்டியமைக்கப்படும் துவக்க விழா நடத்தப்பட்டுள்ளது. சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையின் மற்றொரு பெரிய ரக எரியாற்றல் திட்டப்பணி அதிகாரப்பூர்வமாக துவங்குவதை இது கோடிட்டுக்காட்டுகின்றது.
இத்திட்டப்பணி கட்டியமைக்கப்பட்ட பிறகு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். 2019ஆம் ஆண்டின் ஆகஸ்டு திங்கள் இத்திட்டப்பணி முழுமையாக செயல்படும். பாகிஸ்தானின் மின்சாரப் பற்றாக்குறை நிலைமையைப் பயனுள்ள முறையில் தணிவு செய்து, உள்ளூர் பொருளாதார மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும்.