• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இஸ்ரேல் தலைவர்களின் சந்திப்பு
  2017-03-22 09:30:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகுவை, மார்ச் 21ஆம் நாள் பெயஜிங்கில் சந்தித்துரையாடினார். புதுமைக்கான பன்முக கூட்டாளி உறவை உருவாக்குவதாக இரு தரப்பும் அறிவித்தன.

சீன-இஸ்ரேல் புதுமைக்கான பன்முக கூட்டுறவு, இரு நாட்டு புதுமைக்கான ஒத்துழைப்புகளை மேலும் முன்னேற்றி, ஒன்றிடம் இல்லாததை மற்றொன்று பெற்றுக் கொள்வதை நனவாக்கி, இரு நாட்டு மக்களுக்கும் அதிக நன்மைகளை வழங்கும். மேலும், சீனா, மத்திய கிழக்கு நாடுகளுடனான தொடர்பு மேன்மேலும் நெருங்கும். அமைதி, நிலைப்புத் தன்மை, வளர்ச்சி ஆகியவற்றை கொண்ட மத்திய கிழக்கு பகுதி, பல்வேறு தரப்புகளின் நலன்களுக்குப் பொருந்தியது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், சீன-இஸ்ரேல் புதுமைக்கான பன்முக கூட்டுறவை உருவாக்குவதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தூய்மையான எரியாற்றல், வேளாண்மை, முதலீடு, நாணயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்து, உலக வளர்ச்சியை முன்னேற்ற இஸ்ரேல் விரும்புகிறது என்றார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040