இந்த இலக்கிய மேதையை நினைவுக் கூரும் வகையில், ஷோ சிங் நகரில் லூ சிவேன் கு லீ என்ற அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், 50 ஹெக்டர் நிலப்பரப்புடையது. நீர் நகரின் தனிச்சிறப்பு நிரம்பிய வரலாற்றுப் பகுதியாகவும் இது விளங்குகிறது. அவரின் பழைய உறைவிடம், மூதாதையரின் உறைவிடம், குழந்தையாக இருந்த போது படித்த பள்ளி முதலியவற்றை அங்கு நேரில் கண்டுரசிக்கலாம்.
லூ சிவேனின் குழந்தை கால வாழ்வு மற்றும் படிப்பை விளக்கிக் கூறிய கட்டுரை ஒன்று சீன மாணவர்களின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. அதில் குறிப்பிட்ட விளையாட்டுப் பூங்கா, படிக்கும் தனிநபர் பள்ளி ஆகியவை லூ சிவேன் கு லீஇல் நேரடியாகப் பார்வையிடலாம்.