சிரியா பிரச்சினை பற்றிய 5ஆவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையில் சிரியா பிரச்சினைக்கான சீன அரசின் சிறப்புத் தூதர் சியே சியவ் யன் கலந்து கொள்வார். சிரியா பிரச்சினையை அரசியல் முறையில் தீர்ப்பதற்கு அவர் ஆக்கப்பூர்வ முயற்சி மேற்கொண்டு பங்காற்றுவார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் குவா சுன் யிங் அம்மையார் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சிரியா பிரச்சினை பற்றிய 5ஆவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை மார்ச் 23ஆம் நாள் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. சிரியா அரசும், அரசு எதிர்ப்பு பிரிவுகளும் பொதுவாக உறுதிப்படுத்தும் அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதன்முறையாகும். (மீனா)