இலண்டனில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள் விழாயக்கிழமை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு ஆறுதல் செய்தியை அனுப்பி, உயிரிழந்தோருக்கு இரங்கலையும், காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.
இலண்டன் பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்ததோடு, எந்த விதமான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்ப்பதாகவும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.