அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்ற நேட்டோ, மாற்றங்களை ஏற்று, புதிய அறைகூவல்களைச் சமாளிக்க வேண்டும் என்று நேட்டோ துணைத் தலைமைச்செயலாளர் ரோஸ் கோட்டேமொல்லர் 22-ஆம் நாள் புடாபெஸ்டில் தெரிவித்தார்.
அன்று நடைபெற்ற நேட்டோ வளர்ச்சி முறை மாற்றம் பற்றிய ஆய்வுக் கூட்டத்தின் துவக்க விழாவில், புதிய மாற்றங்களை ஏற்றால் மட்டுமே, நேட்டோ தொடர்ந்து வலிமையை நிலைநிறுத்த முடியும் என்று கோட்டேமொல்லர் கூறியுள்ளார். மேலும், பயனுள்ள முறையில் அச்சுறுதல்களைச் சமாளிக்கும் வகையில், நேட்டோ உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையில், இராணுவ நிபுணர்கள், பாதுகாப்புக் கொள்கை நிபுணர்கள், நேட்டோவுக்கான உறுப்பு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட சுமார் 350 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். நேட்டோ எதிர்நோக்குகின்ற அறைகூவல்கள், ஐ.எஸ் அதிதீவிரவாத பிரச்சினை, பயங்கரவாத பிரச்சினை, இணையம் முதலியவை பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.(தேன்மொழி)