• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய வட்டார ஒத்துழைப்பு பற்றி சாங் கெள லீயின் கருத்து
  2017-03-24 16:25:38  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசியா, தற்போதைய உலகில் வளர்ச்சிக்கான உயிராற்றலும் உள்ளார்ந்த ஆற்றலும் மிக்க பிரதேசங்களில் ஒன்றாகும் என்றும், ஆசியாவின் வட்டார ஒத்துழைப்பு மேலும் சீராக வளர்ச்சியடையும் என நம்புவதாகவும் சீனத் துணை தலைமையமைச்சர் சாங் கெள லீ தெரிவித்துள்ளார். 24ஆம் நாள் சீனாவின் ஹாய்னான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2017ஆம் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சீன மற்றும் வெளிநாட்டுத் தொழில் முனைவோரைச் சந்தித்த போது அவர் இதைத் தெரிவித்தார்.

சாங் கெள லீ பேசுகையில், ஒன்று, அமைதியான, நிதானமான வளர்ச்சியை சூழலைக் கூட்டாக பேணிகாக்க வேண்டும். ஆசியா, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய சக்தியாக விளங்குகிறது. ஒத்துழைப்பு மூலம் வளர்ச்சியடைவதில் பன்னாடுகள் ஊன்றி நிற்க வேண்டும். இரண்டு, ஒத்துழைப்பதன் மூலம் ஒன்றுக்கொன்று வெற்றி பெறுவது என்னும் கருத்தை உறுதியாக நிலைநாட்ட வேண்டும். மூன்று, வெளிநாட்டுத் திறப்பு, இணக்கம், சரிசமம் ஆகிய எழுச்சிக்கிணங்க, போ ஆவ் ஆசிய மன்றத்தின் பங்குகளை முழுமையாக வெளிக்கொணர்த்து, ஆசியப் பொருளாதார ஒருமைப்பாட்டை முன்னேற்றி, உலகப் பொருளாதாரத்துக்கு பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.(மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040