சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங்கும் ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் மால்கல்ம் டர்ன்புலும் மார்ச் 24ஆம் நாள் மாலை சிட்னியில் சீன-ஆஸ்திரேலிய தொழில் மற்றும் வணிகத்துறை தலைமை செயல் அதிகாரிகளின் வட்ட மேசைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இரு நாட்டுப் பிரதிநிதிகளின் உரைகளுக்குப் பின், லீ கெச்சியாங் பேசுகையில், இவ்வட்ட மேசைக் கூட்டம் இரு நாட்டு தொழில் மற்றும் வணிகத்துறை அரசுகளுடன் தொடர்பை மேற்கொள்ளும் முக்கிய வழியாகும். இரு நாட்டு அரசுகள் மேலும் நல்ல வர்த்தக மற்றும் முதலீட்டுச் சூழ்நிலையை உருவாக்கி, சேவைத்துறை முதலீடு ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று திறப்பை விரிவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.