தென் சீனக் கடற்பகுதியின் நெடுகில் உள்ள நாடுகள் உலகில் வேறு பிரதேசங்களில் அனுபவங்களைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தி, தொடர்புடைய ஒத்துழைப்பு அமைப்புமுறையை உருவாக்க வேண்டும் என்று சீனத் துணை வெளியுறவு அமைச்சர் லீ ச்சென்மீன் 25ஆம் நாள் தெரிவித்தார். மேலும் தத்தமது நிலைப்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத அடிப்படையில் ஒன்றுக்கொன்று நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, நலன்களைப் பகிர்ந்து கொள்வதற்கு பயனுள்ள மேடை ஒன்றை நிறுவ வேண்டும் என்றும் அவர் கூறினார். போஆவ் ஆசிய மன்றத்தின் 2017ஆம் ஆண்டுக்கூட்டத்தின் தென் சீனக்கடல் பற்றிய துணை கருத்தரங்கில் உரை நிகழ்த்திய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.