அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படை மார்ச் 17ஆம் நாள் ஈராக்கின் மொசூல் நகர் மீது வான் தாக்குதல் தொடுத்ததை அமெரிக்க இராணுவம் 25ஆம் நாள் ஏற்றுக் கொண்டது. முன்னதாக, இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 200க்கும் அதிகமானோர்களில் பெரும்பாலானோர் அப்பாவி மக்கள் என்று ஈராக் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தெரிவித்திருந்தனர். இச்சம்பவம் பற்றி அமெரிக்கா புலனாய்வு மேற்கொண்டு வருகிறது.
இத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உண்மையாக இருந்தால், 2014ஆம் ஆண்டு தொடங்கி ஐஎஸ் அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா பங்கெடுத்த பிறகு அப்பாவி மக்களிடையில் ஏற்படுத்திய மிக கடுமையான உயிரிழப்பு இதுவாகும் என்று தி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டது. (வான்மதி)