சீனத் துணை தலைமையமைச்சர் வாங் யாங் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் நேபாளத் தலைமையமைச்சர் புஷ்பா கமால் தகால் பிரசண்டாவைச் சந்தித்துரையாடினார்.
சீன-நேபாள உறவில் சீனா வெகுவாக கவனம் செலுத்தி வருகின்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நிர்மானத்தில் நேபாளம் முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாகும். நேபாளத்துடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்களும் உருவாக்கிய பொதுக் கருத்துகளை நடைமுறைப்படுத்தி, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சியை மேலும் தூண்ட வேண்டுமென சீனா விரும்புவதாக வாங் யாங் கூறினார்.
ஒரே சீனா என்ற கொள்கையை நேபாளம் உறுதியுடன் செயல்படுத்தி வருகின்றது. நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி வழங்கி வரும் சீனாவிற்கு நேபாளம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றது. அதோடு, நேபாளம் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நிர்மானத்திலும், பிரதேச பொருளாதார ஒத்துழைப்பிலும் பங்கெடுக்க வேண்டுமென விரும்புவதாக பிரசண்டா கூறினார்.(மோகன்)