போஆவ் ஆசிய மன்றத்தின் 2017-ஆம் ஆண்டுக் கூட்டம் மார்ச் 26-ஆம் நாள் பொருளாதார உலகமயமாக்கத்தை முன்னேற்றும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தின் கூட்டுச் செழுமை மற்றும் தொடரவல்ல அதிகரிப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், சந்தையின் திறப்பு, பொறுமைக்குரிய அதிகரிப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை உறுதியாக முன்னேற்ற வேண்டும் என்று இவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார உலகமயமாக்கமானது, அறிவியல் தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தால் பெறப்படும் இன்றியமையாத விளைவாகும். பொருளாதார உலகமயமாக்கத்தால் ஏற்படும் புதிய பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், உலகம் முன்முயற்சியுடன் பொருளாதார உலக மயமாக்கத்தின் வளர்ச்சிப் போக்கிற்கு இணங்க, உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, உலக மேலாண்மை அமைப்பு முறைமையைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(தேன்மொழி)