• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈராக்கில் நாசப்படுத்தப்பட்ட கட்டிடத்தில் கண்டறியப்பட்ட அப்பாவி பூதவுடல்கள்
  2017-03-27 10:34:16  cri எழுத்தின் அளவு:  A A A   

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசூலின் மேற்குப் பகுதியில் நாசப்படுத்தப்பட்டுள்ள ஒரு கட்டிடத்திலிருந்து, 61 பூதவுடல்கள் மீட்புதவிப் பணியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளதாக ஈராக் இராணுவ வட்டாரம் 26-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈராக்கின் மொசூலில் அமெரிக்கா ஆதரவு அளிக்கும் வான் தாக்குதல் நடவடிக்கையில், நூற்றுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர் என்று அண்மையில் வெளியான நிகழ்படம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.
இராணுவத் துறை நிபுணர்கள் இடம்பெறும் குழு ஒன்று நாசப்படுத்தப்பட்ட இக்கட்டிடத்தைப் பரிசோதனை செய்துள்ளது. இக்கட்டிடத்தின் சுவருக்குள் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், பெரிய ரக வாகன குண்டுகள் வெடித்ததற்கான அறிகுறிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இது, இக்கட்டிடம் நாசப்படுத்தப்பட்டதன் காரணமாகும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040