• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏமன் மக்களுக்கான மனித நேய உதவி
  2017-03-27 14:32:23  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த 2 ஆண்டுகளாக, ஏமன் மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து காணப்படுகிறது. இதனால், தற்போது, சுமார் 1 கோடியே 90 இலட்சம் மக்களுக்கு மனித நேய உதவி தேவைப்படுகின்றது. இது ஏமன் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதியைத் தாண்டியுள்ளது என்று மனித நேய விவகாரத்துக்குப் பொறுப்பான ஐ.நா துணை தலைமைச் செயலாளர் ஸ்டீபன் ஓ பிரெய்ன் 26ஆம் நாள் கூறினார்.

வான் தாக்குதல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களால், ஏமன் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்கள் பற்றக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 30 இலட்சம் பேர் வீடுவாசலின்றி அல்லல்பட்டு வருகின்றனர். 70 இலட்சம் பேர் பட்டினியை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவர் கூறினார்.

60 இலட்சம் ஏமன் மக்களுக்கு ஐ.நா மற்றும் இதர சர்வதேச அமைப்புகள் உதவியை வழங்கியுள்ளன. ஆனால், இன்னமும் நிதிப் பற்றாக்குறை நிலவுகின்றது. ஏமன் மோதல் பற்றிய பல்வேறு தரப்புகளும் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். இல்லாவிடில், இந்நெருக்கடி யைச் சமாளிக்க முடியாது என்று ஸ்டீபன் ஓ பிரெய்ன் கூறியுள்ளார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040