சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழிக்காந திறன் ஆக்கப்பணி மையத்தை நிறுவும் விழா மார்ச் 27-ஆம் நாள் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி ஆக்கப்பணியினைச் சிறப்பாக ஆராய்வதற்காக பாகிஸ்தானில் நிறுவப்பட்ட முதலாவது அதிகாரப்பூர்வ சிந்தனைக் கிடங்கு இதுவாகும்.
பாகிஸ்தானின் திட்டம், வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத் துறை அமைச்சர் அசன் இக்பால் தொடக்க நிறுவுதல் விழாவில் உரைநிகழ்த்தியபோது, குறைவான முதலீட்டு ஈர்ப்பு ஆற்றல், அதிக அளவிலான எரியாற்றல் பற்றாக்குறை, பின்தங்கிய போக்குவரத்து அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பாகிஸ்தானில் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, இந்த இடைவழியின் ஆக்கப்பணி உதவி அளித்து, நாட்டின் பொருளாதார மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு வாய்ப்பு மற்றும் உயிராற்றலை வழங்கும் என்றார். (தேன்மொழி)