சிரியா பிரச்சினை பற்றிய ஜெனீவா பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்த பல்வேறு தரப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்குமாறு ஐ.நா தலைமைச் செயலாளர் அண்போனியா குட்ரைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அவரின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் 27ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நடந்து வருகின்ற ராணுவத் தாக்குதலால் 4 இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களுக்குப் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பில் ஐ.நா கவனம் செலுத்தி வருகின்றது. சர்வதேச சட்டப்படி, பல்வேறு தரப்புகளும் அப்பாவி மக்களையும் ராணுவசார்பற்ற வசதிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று ஹக் கூறினார்.(மோகன்)