பராக் ஒபாமாவின் பதவிக்காலத்தில் கையொப்பமிடப்பட்டுள்ள தேவையில்லாத காலநிலை கொள்கையை நீக்கும் வகையில், அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் மார்ச் 28-ஆம் நாள் ஒரு உத்தரவைப் பிறப்பிப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சீன் ஸ்பைசர் 27-ஆம் நாள் தெரிவித்தார்.
அமெரிக்காவின் உள்நாட்டில் எரியாற்றலை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதில் வகுக்கப்பட்டுள்ள தேவையில்லாத கண்காணிப்பு தடையை நீக்கும் பொருட்டே, இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவின் எரியாற்றல் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று ஸ்பெசர் கூறினார்.
தவிர, அமெரிக்காவின் எரியாற்றல் மற்றும் மின்னாற்றலை, நியாயமான விலை, நம்பகம் மற்றும் தூய்மை என்ற நிலைமையில் நிலைநிறுத்த இவ்வுத்தரவு வழிவகை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.(தேன்மொழி)