ஷோ சிங் மது சீனா மட்டுமல்ல உலகளவிலும் புகழ் பெற்றுள்ளது. உலகில் மது வகைகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, அரிசி மது, பீர் மற்றும் ஒயின். அவற்றில், அரிசி மது மட்டும் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். சீனாவின் அரிசி மது தயாரிப்பில் ஷோ சிங் முதலிடத்தை வகிக்கும் என்பதில் ஐயமில்லை.
தரம் மிக்க ஒட்டு அரிசியால் ஷோ சிங் மது தயாரிக்கப்படுகிறது. நீர், மது தயாரிப்புக்கு ரத்தம் போலவே அரியதாக இருக்கும். அதனால், ஷோ சிங் மது தயாரிப்பில் நீரின் பயன்பாடு மிகவும் முக்கியமானது. ஷோ சிங் நகரின் தென் மேற்கிலுள்ள ஏரியின் நீரால் தான் ஷோ சிங் மது தயாரிக்கப்பட்டது. வேறு நீரைப் பயன்படுத்தினால், ஷோ சிங் மது கூற முடியாது. கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு வணிகர்கள் பலர் ஷோ சிங் நகருக்கு வந்து மது தயாரிப்பின் முழு செயல்முறையைப் படமெடுத்தனர். பின்னர் தங்கள் நாட்டுக்குத் திரும்பி அதே மாதிரியில் மது தயாரிக்க முயற்சி செய்தனர். ஆனால், ஒரே முறையில் தயாரிக்கப்பட்டாலும், அதன் சுவையோ, ஷோ சிங் மதுவுடன் ஒப்பிடும் போது, வேறு மாதிரியிலானது. ஏரி நீர் தான் அதற்கான காரணமாகும்.