• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-நேபாள மக்களுக்கு நன்மை தரக்கூடிய நட்புறவு
  2017-03-28 18:04:13  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் நேபாள தலைமை அமைச்சர் புஷ்பா கமல் தகால் பிரசண்டாவைச் சந்தித்தார்.

ஷிச்சின்பிங் பேசுகையில், சீன-நேபாள நட்பு ஒத்துழைப்பு இருநாடுகள் மற்றும் இருநாட்டு மக்களின் அடிப்படை நலனுக்குப் பொருத்தமானது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான கூட்டு கட்டுமானத்தை வாய்ப்பாகக் கொண்டு, பல்வேறு துறைகளிலான இருதரப்பு ஒத்துழைப்புகளை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

நேபாளத்துக்கு ஆதரவு மற்றும் உதவியளித்து வரும் சீனாவுக்கு பிரசண்டா நன்றி தெரிவித்ததோடு, சர்வதேச விவகாரத்தில் சீனா ஆற்றிய முக்கிய பங்கினையும் பாராட்டினார். (வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040