• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக் கடல் தொடர்பான சீன-பிலிப்பைன்ஸ் கலந்தாய்வு
  2017-03-28 18:14:21  cri எழுத்தின் அளவு:  A A A   
தென் சீனக் கடல் பிரச்சினைக்கான இருதரப்பு கலந்தாய்வு அமைப்பு முறையின் முதலாவது கூட்டத்தை வரும் மே திங்கள் சீனாவில் சீனாவுடன் இணைந்து நடத்தும் வகையில், பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்பாளருக்கு சீனத் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது. தற்போது திட்டவட்டமான விஷயங்கள் குறித்து இருதரப்பும் கலந்தாலோசித்து வருகின்றன என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 28ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தவிரவும், பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் பிரதிநிதிக் குழு மேற்கொள்ளும் சீனப் பயணம் குறித்து அவர் பேசுகையில், சீன-பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படைகளின் ஒத்துழைப்பு, இருநாடுகளின் பரஸ்பர நம்பிக்கையையும் நட்புறவையும் வலுப்படுத்தத் துணைபுரியும் என்று குறிப்பிட்டார். (வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040