தென் ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாநிலத்திலுள்ள ஒரு ராணுவத் தளம் மீது 27ஆம் நாளிரவு தலிபான் அமைப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 4 படைவீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமுற்றனர் என்று காந்தகர் மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 28ஆம் நாள் கூறினார்.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு நிலைமை மோசமாகி வருகின்றது. தலிபான் அமைப்பினர்கள் அரசுப் படையைத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். காந்தகர் மாநிலத்தின் பெரும் பகுதிகளில் தலிபான் அமைப்பினர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(மோகன்)