உள்ளூர் நேரப்படி மார்ச் திங்கள் 28ஆம் நாள் நண்பகல், நியூசிலாந்தில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வருகின்ற சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், அந்நாட்டுத் தலைமையமைச்சர் பில் இங்கலிஷூடன், பல்வேறு துறைகளைச் சேர்நதவர்கள் நடத்திய வரவேற்பு விருந்தில் கூட்டாக கலந்து கொண்டு உரை நிகழ்ந்தினர். நியூசிலாந்து அரசியல் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
லீகெச்சியாங் பேசுகையில், சீன-நியூசிலாந்து தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45 ஆண்டுகளில், இரு நாட்டு உறவு நிதானமாகவும் சீராகவும் வளர்ந்து வருகின்றது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, முன்எப்போதும் கண்டிராத அளவை எட்டியுள்ளது என்று அவர் கூறினார்.