வங்காளதேசத் தலைமையமைச்சர் ஷேக் ஹசினா அம்மையார் அடுத்த திங்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் போது, இந்தியாவும் வங்காளதேசமும் வங்காளவிரிகுடா கூட்டு ஒத்துழைப்பு பற்றிய நெறிவரைபடத் திட்டத்தை உருவாக்கக்கூடும். நீலப் பொருளாரத்தை வளர்த்து, இந்து பெருங்கடல் பிரதேசத்தின் கடலோர ஒத்துழைப்பைத் தூண்டி, கடல் வளத்தைக் கூட்டாக வளர்த்து பயன்படுத்துவது பற்றி இந்தியத் தலைமையமைச்சர் நரந்திர மோடி முன்வைத்த முன்மொழிவுக்கு இது பொருந்தியதாக இருக்கிறது. அதே வேளையில், பயங்கரவாதத்தை கூட்டாக ஒழித்து, இக்கடற்பரப்பின் அமைதி மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக பேணிகாக்கும் பொருட்டு, தேசியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய முதலாவது பன்முக ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இரு தரப்பும் கையொப்பமிட வாய்ப்புள்ளது என்று தி பினான்சியல் எக்ஸ்பிரஸ் எனும் வங்காளதேசச் செய்தித்தாள் மார்ச் 28ஆம் நாள் தெரிவித்தது.
இது வரை, இந்தியா முன்வைத்த நீலப் பொருளாதாரம் பற்றிய நெடுநோக்கு திட்டத்தில் பங்கெடுக்க, செஷெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.