ஹெபெய் மாநிலத்தில் "சியுங்ஆன்" எனும் புதிய பகுதியை அமைப்பதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.
பெய்ஜிங்-தியன்ஜின்-ஹெபெய் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஒன்றாக, இந்த புதிய பகுதியை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.