சிரிய அரசுப் படை, எப்போதும் நச்சு வாயுக்களைப் பயன்படுத்தாது. அந்த இடத்தில் அரசு எதிர்ப்புப் படையின் ஒரு வேதியியல் ஆயுத கிடங்கு தாக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்று சிரியாவின் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லண்டனில் தலைமையகம் கொண்ட மனித உரிமைக்கான சிரிய ஆய்வு நிறுவனம் இது குறித்து கூறுகையில், இட்லெப் மாநிலத்திலுள்ள ஒரு வட்டத்தில் வான் தாக்குதல் நடைபெற்றது. இதில் போர் விமானங்கள் நச்சு வாயுக்களைப் பயன்படுத்தின. இதில் குறைந்தது 58 பேர் உயிரிழந்தனர், பலர் காயமுற்றனர் என்று தெரிவித்தது.(ஜெயா)