• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நச்சு வாயுக்கள் பற்றி சிரிய படையின் கருத்து
  2017-04-05 09:12:27  cri எழுத்தின் அளவு:  A A A   
சிரியாவின் வடமேற்கில் அரசு எதிர்ப்புப் படையால் கட்டுப்படுத்தப்படும் இட்லெப் மாநிலத்தில் நச்சு வாயுக்களை அரசுப் படை பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட செய்தியை சிரியா இராணுவம் மறுத்தது.

சிரிய அரசுப் படை, எப்போதும் நச்சு வாயுக்களைப் பயன்படுத்தாது. அந்த இடத்தில் அரசு எதிர்ப்புப் படையின் ஒரு வேதியியல் ஆயுத கிடங்கு தாக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்று சிரியாவின் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லண்டனில் தலைமையகம் கொண்ட மனித உரிமைக்கான சிரிய ஆய்வு நிறுவனம் இது குறித்து கூறுகையில், இட்லெப் மாநிலத்திலுள்ள ஒரு வட்டத்தில் வான் தாக்குதல் நடைபெற்றது. இதில் போர் விமானங்கள் நச்சு வாயுக்களைப் பயன்படுத்தின. இதில் குறைந்தது 58 பேர் உயிரிழந்தனர், பலர் காயமுற்றனர் என்று தெரிவித்தது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040