பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கு மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்று பிரிட்டன் நிதி அமைச்சர் ஃபிலிப் ஹாமண்ட தெரிவித்துள்ளார். புதன்கிழமை மும்பையில் நடைபெற்ற பிரிட்டன்-இந்திய ஃபின்டெக் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது இந்தியாவின் ஃபின்டெக் மென்பொருள் சந்தையின் மதிப்பு 120 கோடி அமெரிக்க டாலராகும். 2020ஆம் ஆண்டுக்குள் இது மேலும் ஒரு மடங்காக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் இந்தியாவில்தான் மிக அதிக அளவில் இளைஞர்கள் உள்ளனர். பிரிட்டனின் வர்த்தகம் மற்றும் தொழில் நுட்பத் துறைக்கு இது அதிக வாய்ப்புகளை வழங்கும் என்று பிரிட்டன் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் வாயர் ஃபொரஸ்ட் குறிப்பிட்டார். (வாணி)