இது தொடர்பாக இருநாடுகளின் உயர் நிபுணர்கள் இடையேயான 3ஆவது கூட்டம் காத்மாண்டுவில் வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, இக்கூட்டத்தின் நேபாள ஒருங்கிணைப்பாளர் பாஷ் பகதூர் தப்பா கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை திருத்தி அமைப்பதில் இரு நாடுகளும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. இருப்பினும், இது தொடர்பாக ஒத்த கருத்துக்களை எடுத்துவதற்கு மேலும் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
நீர்வளத்தை பகிர்வது, வர்த்தகம் மற்றும் எல்லை கடந்த சாலை உள்ளிட்டவை தொடர்பான உடன்படிக்கை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக, அடுத்த கூட்டம் வரும் மே மாதம் உத்தரகண்டில் நடைபெற உள்ளது.