• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து ரஷியாவின் கருத்து
  2017-04-08 15:02:11  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்க கடற்படை 7ஆம் நாள் சிரியா அரசு படையின் விமானத் தளம் மீது ஏவுகணையைச் செலுத்தியது தொடர்பாக, ரஷிய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவும் அமெரிக்காவின் இச்செயலைக் கண்டித்துள்ளார்.

சிரியாவின் இத்லேப் மாநிவலத்தில் நிகழ்ந்த "வேதியியல் ஆயுத சம்பவத்தின்" உண்மையை அறியாத நிலைமையில், அமெரிக்கா இச்சம்பவத்தைக் காரணமாகக் கொண்டு, பயங்கரவாதத்தை ஒழிக்கும் சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தியது, அரசுரிமை கொண்டுள்ள நாடு மீதான "ஆக்கிரமிப்பாகும்" என்றும், இச்செயல் சிரியா பிரச்சினைக்கு சிக்கலை அதிகரித்து, ரஷிய-அமெரிக்க உறவைச் சீர்குலைக்கும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் அன்று உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் பேசுகையில், சிரியா அரசு படை மீது தாக்குதல் நடத்திய செயல், ஹப்ஹாத் அல் நுஸ்ரா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு சாதகமாக இருக்கும் அதே வேளையில், சிரியா பிரச்சினை பற்றிய அமைதி பேச்சுவார்த்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040